Saturday, September 27, 2008

தழும்பு

அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்.

வந்தது
அப்படியும் வாழ்கிறோம்.


நம்மோடு நாம் காண
இத் தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.
-

கவிஞர் ராஜ சுந்தரராஜனின் 'முகவீதி'யிலிருந்து